Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

சுய புகைப்படம் எடுப்பதற்கான சிறந்த 10 இடங்கள்

இயற்கை அற்புதங்களையும், மனிதனால் உருவாக்கப்பட்ட சின்னங்களையும், புகைப்படம் எடுத்து, இந்த புகைப்படங்களை பகிர்வதன் மூலம் முழுமையான திருப்தி ஏற்படுகிறது. சுய புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும். இங்கு சுய புகைப்படங்களை எடுக்காமல் இருக்க முடியாது என்பதற்கு உத்தரவாதம் தருகிறோம்.

1. நார்வே – ட்ரோல்டங்கா

நார்வேயில் இருக்கக்கூடிய ட்ரோல்டங்கா புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடமாகும். இந்த இயற்கை அதிசயம், ஒரு பெரிய மலையில் இருந்து தனியாக எடுக்கப்பட்ட கல் போல காட்சி அளிக்கிறது. தரை பகுதியிலிருந்து 700மீ உயரத்திலுள்ள இந்த ட்ரோல்டங்கா, கண்ணை கவரக்கூடிய ரிங்கெடல்வசட் ஏரி, பனிக்கட்டி பாலம் மற்றும் ஹாப்டேஞ்சர் பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது. நடைபயணமாக இங்கு செல்ல 10-12 மணி நேரம் ஆகும். ஆதலால் காலை 10 மணி அளவில் பயணத்தை தொடங்குவது சிறந்ததாகும்.

2. ஜிம்பாப்வே – விக்டோரியா நீர்வீழ்ச்சி

ஜிம்பாப்வேயில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி சுய புகைப்படம் எடுப்பதற்கான சிறந்த இடமாகும். இங்கு புகைப்படம் எடுப்பது என்பது, வாழ்க்கையில் ஒரு விளிம்பில் இருப்பது போல் உள்ளது. கோடை கால மாதங்களில் ஒன்றுகூடி போகக்கூடிய இடமாகும். பாதி முழ்கடிக்கப்பட்ட நீச்சல் குளத்திற்கு நடுவில் நின்றால், 100மீ வரை கைவிடப்பட்ட பகுதியை காணமுடியும். இது ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது. நாம் சில நேரங்களில் அங்கே (ஜிம்பேஜ் ஆறு) நின்றுவிட்டால், அங்கே தங்கி விடலாம் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. வழிகாட்டுபவர்கள் மூலமாக இந்நீர்வீழ்ச்சியின் முகப்பிற்கு அழைத்து சென்று நீச்சல்குளம் அனைத்தையும் சுற்றி பார்க்க முடியும்.

3. அமெரிக்கா – யல்லோஸ்டோன் தேசிய பூங்கா

இந்த பூங்காவில் நாம் எங்கிருந்து சுய புகைப்படம் எடுத்தாலும் சிறப்பாக இருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. வசந்த காலங்களில், யல்லோஸ்டோன் ஏரி, தேனி கீஸ்ஸர் போன்ற இடங்களில் புகைப்படம் எடுத்து நம் சொந்தங்களிடம் காட்டும் போது ஏற்படுகின்ற மகிழ்;ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். ஒரு புகைப்படத்தில் ஏறத்தாழ 3468 மைல் தொலைவுள்ள இயற்கை காட்சிகளை நாம் காண முடியும்.

4. தென்னாப்பிரிக்கா – கேப்டவுன் கடற்கரை

பெண்குயினை மிகவும் விரும்புகின்றவர்கள், கண்டிப்பாக தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கேப்டவுனுக்கு அருகிலுள்ள கடற்கரைக்கு செல்ல வேண்டும். 3000த்திற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா பென்குயின்கள் இங்குள்ள குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றது. இந்த கடற்கரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் இங்குள்ள பறவைகளுடன் புகைப்படம் எடுக்க மக்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

5. குரோசியா – தேசிய பூங்கா

குரோசியாவில் அமைந்துள்ள மிகப் பெரிய தேசிய பூங்காவாகும். இந்த தேசிய பூங்கா தென்கிழக்கு ஐரோப்பாவில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இந்த பூங்கா உலகளவில் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால் இங்கு 16 ஏரிகள் அடுக்குகளாக அமைந்திருக்கிறது. அருகிலுள்ள மலையிலிருந்து விழக்கூடிய தண்ணீர்கள் ஓரே திரளாக வந்து சேரும். புகைப்படம் எடுக்க இதைவிட சிறந்த இடம் வேறு எங்கு உள்ளது? இந்த ஏரியின் வண்ணங்கள், சூரியனின் கோணங்களுக்கு ஏற்றவாறும், அந்த தண்ணீரில் உள்ள தாதுக்கு ஏற்றவாறும், அத்தண்ணீரில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்றவாறும், அத்தண்ணீரின் நிறம் மாறும். பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாகவும், சாம்பல் நிறமாகவும் மாறும். அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாகும்.

6. பெரு – மச்சு பிச்சு

மலையில் இருக்கக்கூடிய இந்த மச்சு பிச்சு, கடல் மட்டத்திலிருந்து 2430 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளது. உலகத்தில் சுற்றுலா செல்லுபவர்கள், இந்த 15ம் நூற்றாண்டின் மச்சு பிச்சுவை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 26 மைல் தூரம் பயணம் செய்தால் தான் இந்த மலை உச்சியை அடைய முடியும். இந்த பயணம் உலகத்தில் ஒரு சிறந்த பயணமாகக் கருதப்படுகிறது. வழியில் இருக்கக்கூடிய கட்லி லாமாஸ் பகுதி புகைப்படம் எடுக்க ஒரு சிறந்த இடமாகும். வாழ்வில் மறக்க முடியாத ஒரு நினைவையும் தருகிறது.

7. கனடா – மலைன் ஏரி

கனடாவில் இருக்கக்கூடிய ஜஸ்பீர் தேசிய பூங்காவில் மலைன் ஏரி உள்ளது. இது உலகத்தின் இரண்டாவது பெரிய பனிக்கட்டி ஏரியாகும். ஏரியின் மையப்பகுதியில், படகில் செல்லும் போது, பனிமூடிய மலைன் ஏரியை நாம் காண முடியும். அது நம் கண்களுக்கு விருந்தாகும். வண்ணமையமான இந்த ஏரி, ஸ்பிரிட் தீவிற்கு அருகில் உள்ளது. இந்த தீவு, புகைப்படம் எடுக்க உலகத்திலே ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

8. இத்தாலி – சினியூ டெரார்

அற்புதமான, இந்த சினியூ டெரார் இத்தாலியின் பொக்கி;சமாக கருதப்படுகிறது. இப்பகுதி இத்தாலியன் ரிவியராவில் அமைந்துள்ளது. உலகத்தில் இருந்து அனைத்து சுற்றுலா பயணிகள் அடிக்கடி இங்கு வருகை தருவதால் இந்த பகுதியை ஐந்து இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கூர்மையான நிலப்பரப்பு மற்றும் வண்ணமயமான மேல் தளம், நம்மை இங்கு புகைப்படம் எடுப்பதற்கான ஆர்வத்தை தூண்டுகிறது.

9. இந்தியா – சிட்டார்க் கோட்டை

இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் பகுதியில் உள்ள கோட்டையானது, நான்கு அரண்மனைகள், நான்கு நினைவிடங்கள், 19 முக்கியமான கோவில்கள் மற்றும் 20 செயல்பாட்டு நீர் அமைப்புகள், ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்தியாவில் உள்ள சுய புகைப்படம் எடுப்பதற்காக சிறந்த இடங்களில் ஒன்றாகும்.; 7ம் நூற்றாண்டில் உள்ள இக்கோட்டை இ;ந்தியாவில் மிகப்பெரிய கோட்டையாகும். இந்த கோட்டை பிறநாட்டினராலும், பல்வேறு வரலாற்று ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டு வந்தது. 1905 இக்கோட்டை புதுப்பிக்கப்பட்டது.

10. சீனா – பெருஞ்சுவர்

சீனாவில் உள்ள பெருஞ்சுவர் பார்ப்பதற்கு சிறந்த இடமாகவும், உலகிலேயே அற்புதமான இடமாகவும், சுய புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாகவும், சிறந்த நினைவிடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயணிக்க முடியும். இச்சறுக்கு வண்டியை முன்னோக்கி தள்ளும் போது வண்டி நகரும், பின்னோக்கி இழுக்கும் போது நிற்கும். பனிச்சறுக்கு வண்டியின் மூலமாக ஒரு மைல் துரத்திற்கு உள்ளே செல்லும் போது அங்குள்ள காடுகளில் சுய புகைப்படங்கள் எடுக்கமுடியும். உலகத்திலே சுய புகைப்படம் எடுப்பதற்கு ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *